Posted By Muthukumar,On November 14,2014
* கறிவேப்பிலையில் மிகுந்த இரும்புச் சத்தும் ஃபோலிக் ஆஸிடும் உள்ளது.
* கல்லீரலுக்கு ஏறப்டும் ஸ்ட்ரெஸ்ஸிலிருந்து காக்கிறது.
* ‘கீமோதெரபி’ யினால் உண்டாகும் பாதிப்பிலிருந்து பாதுகாக்கிறது.
* பருவுக்கும் , நகத் தொற்றுக்கும் நல்லதொரு வீட்டு வைத்தியம்.
* பச்சையாக மென்று தின்றால், சர்க்கரை வியாதிக்கு நல்ல தடுப்பு.
மாரடைப்பைத் தடுக்கும் ஜாக்கிங்:
பெரும்பாலான மருத்துவர்கள்கூடத் தங்களை மாரடைப்பிலிருந்து காத்துக்கொள்வதற்காக தினமும் மெல்லோட்டத்தை மேற்கொள்கின்றனர். 2.மெல்லோட்டத்தின் பயன்கள் வருமாறு:
* நமது இதயம் சுருங்கும்போது உடலின் பல பகுதிகளுக்கு செல்லும் ரத்தத்தின் அளவு, சாதாரண நிலையைவிட மெல்லோட்டத்தின்போது அதிகமாகிறது.
* ரத்தக் குழாய்களையும், ரத்தக் குழாய்களைச் சுற்றியுள்ள அமைப்புகளையும் மெல்லோட்டம் வலுவடையச் செய்கின்றது.
* ரத்தக் குழாய்களின் உட்பகுதிகளில் ஏற்படும் சிதைவு மாற்றங்களை இது தடுக்கின்றது. அதிகரித்த ரத்த அழுத்த நிலையை குறைக்க துணை புரிகின்றது.
* மெல்லோட்டத்தினால், இதயத் தமனிகளில் ஓடும் ரத்தத்தின் அளவு அதிகமாவதால் தமனிகளில் ரத்தம் உறைவதைத் தடுத்து மாரடைப்பு ஏற்படாமல் காக்கின்றது.
* ரத்தத்தில் உள்ள கொலாஸ்ட்ரலையும், ட்ரைகிளிசரைடையும் குறைக்க உதவுவதால் மாரடைப்புக்கான வாய்ப்பு குறைகிறது.
* மெல்லோட்டத்தினால், உடம்பின் கீழ்ப்பாகம், குறிப்பாக கால்கள் வலுவடைகின்றன. தொப்பை கரையும்.
* பெரும்பாலும் காலை வேளைகளைல் மெல்லோட்டத்தில் ஈடுபடுவதால், சுத்தமான காற்றை சுவாசிக்கும் வாய்ப்பு அதிகரிக்கின்றது. தூய காற்றை சுவாசிப்பது, மூளைக்கும் சுறுசுறுப்பு கொடுக்கும்.
* வேகமான நடையைவிட மெல்லோட்டம் அதிக பயன் அளிப்பது என்பது ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
எனவே மெல்லோட்டத்தில் தவறாமல் ஈடுபடவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக