செவ்வாய், 11 நவம்பர், 2014

தண்ணீர் குடிப்பது அவசியம்

தண்ணீர் குடிப்பது அவசியம்:

Posted By Muthukumar On November 11,2014
WATER
* சிறு வயதிலிருந்தே, தேவையான அளவு தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை பெற்றோர் ஏற்படுத்தவேண்டும். இதன்மூலம் உடல்வளர்ச்சியும், சுறுசுறுப்பான வாழ்க்கையும் இவர்களுக்கு அமையும். பெரியவர்கள் தினமும் 8 டம்ளர் தண்ணீர் குடித்தால் நோய்களிலிருந்து காத்துக்கொள்ளலாம்.
* சிறுநீரகம் நன்றாக வேஅலி செய்யவும் தேவையான தண்ணீர் குடிகக்வேண்டியது அவசியம். மூட்டு வலி முதுகுவலி பாதிப்பை தவிர்க்கவும்,தோல் வறட்சி ஏற்படாமல் தடுக்கவும் தண்ணீர் குடிக்கவேண்டும். நல்ல தண்ணீர் அருந்துவது உடல்வலியினை நன்கு குறைக்கும்.
* கழிவுப் பொருட்கள் தண்ணீர் உதவியால், ‘லிம்பாடிக்’ குழாய்களின் மூலம் குடல், சிறுநீரகம் வழியாக வெளியேறுகின்றது. நன்கு தண்ணீர் குடிப்போருக்கு சிறுநீரக கல் உருவாகும் வாய்ப்பு குறைவு. தண்ணீர் குடிப்பதே மூட்டுகளில் வழுவழுப்பு தன்மைக்கு உதவுகின்றது.
* தசைப் பிடிப்பு, சோர்வு போன்றவை உடற்பயிற்சி செய்யும்போது ஏற்படுவதன் காரனம் போதிய தண்ணீர் குடிக்காமையே. புரதம் உடலில் சரிவர இருந்தாலே நல்ல சதை உருவாகும். இந்த புரதம் உடலில் சரியான முறையில் உருவாக்க தண்ணீரே காரணம். இல்லையெனில் அதிக கொழுப்பு உடைய உடலாகிவிடும்.
* உங்கள் தண்டுவடம் நன்கு தண்ணீர் எடுத்துக்கொண்டால், முதுகுவலி குறையும். உடலில் கொழுப்பு அதிகம் சேர்ந்து உடல் பெருத்துவிடும். அதனால் தண்ணீர் குடிப்பதையும் ஒரு பழக்கமாக்கிக்கொள்ளுங்கள். ,
* சிலர் தாகத்தை பசி என்று தவறாக எடுத்துக்கொண்டு அடிக்கடி உண்பர். முதலில் தண்ணீர் அருந்த முறையற்று உணவு அருந்தும் பழக்கம் நின்றுவிடும்.
* சாப்பிடுவதற்கு முன்னால் 1 டம்ளர் தண்ணீர் அருந்தினால், ‘ டயட்’ செய்யவேண்டிய அவசியமில்லை. உணவு குறைவாக தேவைப்படும். உடல் எடையும் குறையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக