Posted on April 30, 2015 by Muthukumar
தனிக்காட்டு ராஜாவாக காடுகளிலும், மலைசார்ந்த பகுதிகளிலும் தன்னிச்சையாக
வளரும் கருடன் கிழங்கு மனிதனின் ஆரோக்கிய வாழ்வுக்கு ஏராள
மான நன்மைகளை வழங்குகிறது. கொடி இனத்தை சேர்ந்த இந்த மூலிகைக்கு, பேய் சீந்தில், கொல்லன் கோவை என்ற வேறு பெயர்களும் உண்டு.
இம்மூலிகையை கயிற்றில் கட்டி தொங்க விட்டால், பார்ப்பதற்கு ஆகாயத்தில் பறக்கும் கருடனைப் போல தோற்றம ளிப்பதால் இதற்கு கருடன் கிழங்கு என்று பெயர்.
மருத்துவ பயன்கள்
இதன் முக்கிய குணம் விஷத்தை முறிக்கும் ஆற்றல் கொண்டது. அத் து
டன் இளைத்த உடலைத்தேற்றவும், உடலை உரமாக்கி சூட்டை தணிக்கும் குணம் கொண்ட து.
ஆனால் சித்த மருத்துவரின் மேற்பார்வையில் உண்ணுதல்வேண்டும், இது அதிககசப்பு சுவை கொண்டது.
சிறப்பாக பாம்பு விஷங்கள், தேள், பூரான் விஷங்கள் எளிதில் முறியும். பாம்பு கடித்தவருக்கு இந்த ஆகாச கருடன் கிழங்கை ஒரு எலுமி ச்சை காயளவு சாப்பிட கொடுக்க உடனே விஷமும் முறிந்து விடும்.
ஆகாச கருடன் கிழங்கு ஒரு எலுமிச்சம் பழ அளவு, அதே அளவு அதன் இலை, அதே அளவு கொடியின் தண்டு இவைகளைப் பொடியாக நறுக்கி ஒரு சட்டியில் போட்டு சீரகம் தேக் கரண்டியளவு, அதே அளவு மிளகு இவைகளை அம்மியில் வைத்து அரைத்து அத்துடன் சேர்த்து அடுப்பில் வைத்து, லேசாக
வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு, நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, காலை மாலை அரை டம்ளர் வீதம் கொடுத்து விட வேண்டும்.
இந்த விதமாக 21 நாட்கள் கொடுத்து வந்தால் ஓயாத வயிற்று வலி, வாதப்பிடப்பு, குலை நோய், பாண்டு ரோகம் இவைகள் யாவும் குணமாகும். ஆனால் காரம், புளி, நல்லெண்ணை யை தவிர்க்கவேண்டும்.