செவ்வாய், 30 டிசம்பர், 2014

`பெரிய’ பலன் தரும் சின்ன வெங்காயம்


தினமும் சாப்பிடவேண்டிய காய்கறிகளில் சின்ன வெங்காயத்துக்குத்தான் முதல் இடம். ஆனால், உரிக்க சோம்பல்பட்டு பலரும் பெரிய வெங்காயத்தையே நாடுகின்றனர்.  உணவில் ருசியைக் கூட்டி, வாசனையைச் சேர்க்கும் சின்ன வெங்காயம் அதிக மருத்துவக் குணங்களைக்கொண்டது.
 சின்ன வெங்காயத்தை 15 நாட்களுக்கு ஒருமுறை நெய் அல்லது எண்ணெயில் வதக்கி உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் என்றும் இளமையுடன் இருக்கலாம்.
  உடல் சூட்டைக்  குறைக்கவல்லது வெங்காயம். பழைய சாதத்தில் மோர் விட்டு, நான்கு சின்ன வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சாப்பிடலாம்.  உடலின் வெப்பம் தணியும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.  ரத்த ஓட்டத்தை சீராக்கும்.
  கணையத்துக்கு உள்ளே இருக்கும் செதிலில் பசை அல்லது அழுக்கு சூழப்பட்டு இருந்தால், இன்சுலின் சுரக்காது. இதனை இயல்பான நிலைக்கு மாற்றி சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க சின்ன வெங்காயம் உதவுகிறது.
  கல்லீரலில் இருக்கும் பித்தத் திரவம் அதிகமாக சுரந்தால், காமாலை வரும். இந்த பித்தத் திரவத்தை இயல்பான நிலையில் சுரக்கவைப்பது சின்ன வெங்காயம்.
  வயிற்றுப்புண், வெள்ளைப்படுதல், கண் நோய் போன்ற பாதிப்பிலிருந்து விடுபட, தினமும் உணவில் சின்ன வெங்காயம் சேர்ப்பது அவசியம். 
  வடகம் கெட்டுவிடாமல் பதப்படுத்திப் பாதுகாக்க, சின்ன வெங்காயம் சேர்த்துத் தயாரித்தால் போதும்.
  அம்மை நோய் வராமல் தடுக்கவும்  வந்தால் சீக்கிரம் குணமாகவும் சின்ன வெங்காயம் உதவுகிறது. ஆண் பிள்ளைகளுக்கு அம்மை வந்தால், அதன் பிறகு இனப்பெருக்க மண்டலம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதனைத் தடுக்க அம்மை ஏற்பட்ட நாளில் இருந்து மூன்று மாதங்கள் சின்ன வெங்காயத்தை உணவில் சேர்த்துவந்தால் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம். 

செவ்வாய், 2 டிசம்பர், 2014

கனவில் அடிக்கடி விந்து வெளியேறுவதை தடுப்பது எப்படி?


நீங்கள் தூங்கும்போது கனவில் அடிக்கடி விந்து வெளியேறுகிறதா அதை எப்ப‍டித் தடுப்ப‍து என்று தெரியாம ல் திணறுகீறீர்களா? இதோ அதற்கான தீர்வு
ஒருவருக்கு எப்பொழுதாவது கனவில் விந்து வெளி யேறினால்
அது ஆரோக்கியமே! அதே சமயம் அடிக்கடி தொடர்ந்து கனவில் விந்துவெளியேற னா ல் அதுஉடலை பலகீனமாக்கி விடும். இதற்குத் தீர்வு – துளசி வேரை இடித்துப் பொடியாக்கி அதை வெற்றிலையில் வைத் து சாப்பிடவேண்டும். 3 நாட்களிலேயே ‘சொப்பன ஸ்க லிதம்’ (கனவில் விந்து வெளியாவது) நின்றுவிடும்.

வெள்ளி, 14 நவம்பர், 2014

கறிவேப்பிலையின் பயன்கள்

Posted By Muthukumar,On November 14,2014
karuveppilai
* கறிவேப்பிலையில் மிகுந்த இரும்புச் சத்தும் ஃபோலிக் ஆஸிடும் உள்ளது.
* கல்லீரலுக்கு ஏறப்டும் ஸ்ட்ரெஸ்ஸிலிருந்து காக்கிறது.
* ‘கீமோதெரபி’ யினால் உண்டாகும் பாதிப்பிலிருந்து பாதுகாக்கிறது.
* பருவுக்கும் , நகத் தொற்றுக்கும் நல்லதொரு வீட்டு வைத்தியம்.
* பச்சையாக மென்று தின்றால், சர்க்கரை வியாதிக்கு நல்ல தடுப்பு.
மாரடைப்பைத் தடுக்கும் ஜாக்கிங்:
பெரும்பாலான மருத்துவர்கள்கூடத் தங்களை மாரடைப்பிலிருந்து காத்துக்கொள்வதற்காக தினமும் மெல்லோட்டத்தை மேற்கொள்கின்றனர். 2.மெல்லோட்டத்தின் பயன்கள் வருமாறு:
jogging
* நமது இதயம் சுருங்கும்போது உடலின் பல பகுதிகளுக்கு செல்லும் ரத்தத்தின் அளவு, சாதாரண நிலையைவிட மெல்லோட்டத்தின்போது அதிகமாகிறது.
* ரத்தக் குழாய்களையும், ரத்தக் குழாய்களைச் சுற்றியுள்ள அமைப்புகளையும் மெல்லோட்டம் வலுவடையச் செய்கின்றது.
* ரத்தக் குழாய்களின் உட்பகுதிகளில் ஏற்படும் சிதைவு மாற்றங்களை இது தடுக்கின்றது. அதிகரித்த ரத்த அழுத்த நிலையை குறைக்க துணை புரிகின்றது.
* மெல்லோட்டத்தினால், இதயத் தமனிகளில் ஓடும் ரத்தத்தின் அளவு அதிகமாவதால் தமனிகளில் ரத்தம் உறைவதைத் தடுத்து மாரடைப்பு ஏற்படாமல் காக்கின்றது.
* ரத்தத்தில் உள்ள கொலாஸ்ட்ரலையும், ட்ரைகிளிசரைடையும் குறைக்க உதவுவதால் மாரடைப்புக்கான வாய்ப்பு குறைகிறது.
* மெல்லோட்டத்தினால், உடம்பின் கீழ்ப்பாகம், குறிப்பாக கால்கள் வலுவடைகின்றன. தொப்பை கரையும்.
* பெரும்பாலும் காலை வேளைகளைல் மெல்லோட்டத்தில் ஈடுபடுவதால், சுத்தமான காற்றை சுவாசிக்கும் வாய்ப்பு அதிகரிக்கின்றது. தூய காற்றை சுவாசிப்பது, மூளைக்கும் சுறுசுறுப்பு கொடுக்கும்.
* வேகமான நடையைவிட மெல்லோட்டம் அதிக பயன் அளிப்பது என்பது ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
எனவே மெல்லோட்டத்தில்  தவறாமல் ஈடுபடவும்.

மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு உடலை ஆரோக்கியமாக்க உதவும் உன்னத உணவுகள்


ன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு உடலை ஆரோக்கியமாக்க உதவும் உன்னத உணவுகள்
*மன அழுத்தத்தில் இருந்து விடுத லை பெற என்ன சாப்பிடலாம் என்று சொல்கிறார் உணவு ஆலோசகர்…
 சிறு வயது முதல் உணவில் கவனம் செலுத்தாமல் விடுவது, தவறான
உணவு முறை இவை இரண்டும் டென் ஷனுக்கு முக்கிய காரணமாக உள்ளது.
*சத்தான உணவுகளைத் தவிர்த்து அதிக கொழுப்பு, பல்வேறு ரசாயனங்கள் உள்ள பாஸ்ட் புட் வகைகளை உட்கொள்வ தால் சோர்வு, நினைவாற்றல் குறைவு, படபடப்பு, உடல் எடை கூடுவது மற்றும் ரத்த கொதிப்பு, இளம்வயதில் ஹார்ட் அட்டாக் என பல நோய்களின் கூடாரமாக உடல் மாறுகிறது.
*உடலில் பிரச்னைகள் இருக்கும்போது அது மன தையும் பாதித்து ஹார்மோன்களையும் பாதிக்க செய்கிறது. இதனால் டென்ஷன் அதிகரித்து மன அழுத்தத்தில் கொண்டுபோய் விடுகிறது.
கு முதலிடம் தர வேண்டும். சிறு வயது முதல் சத்தான கீரை, காய்கறிகள், பழங்கள் சாப்பிடும் பழக்கத்தை குழந்தைகளிடம் ஏற் படுத்த வேண்டும். நமது பாரம்பரிய உணவுகளுக் 
 ஆவியில் வேக வைத்த உணவுகள் மற்றும் பருப்பு வகைகள், தானியங்கள் அதிகளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
*பச்சைப்பயறு, கொள்ளு, கொண் டைக்கடலை மற்றும் பீன்ஸ் உள்ளி ட்ட பயறு வகைகளை கலவையாக முளைக்கட்டி சாலடாக சாப்பிடுவதன்மூலம் உடலுக்கு தேவையான புரோட்டீன் கிடைக்கிறது.
 சத்தான உணவுகள் உடலையும், மனதையும் உற்சாகமாக வைத்தி ருக்கும். குளிர்பான வகைகளை தொடர்ந்து குடிப்பதற்கு தடா போட வும்.
*பர்கர், பீசா மற்றும் ஜங்க் புட் வகைகளை தவிர்க்க வும். இட்லி, கம்பு, ராகிக் களி, சோள மாவு தோசை, கீரை கலந்து செய்யப்படும் அடை வகைகள் என மூன்று வேளை உணவிலும் பாரம்பரிய உணவுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.

இயற்கை முறையில் நரையை மறைக்கலாம்!


ஹேர் கலரிங் சீக்ரெட்ஸ் நரைத்த கூந்தலுக்கு சாயம் பூசிய காலம் மாறி, இன்று கருத்த கூந்தலைக் கூட கலர் கலராக மாற்றிக் கொள்வதே ஃபேஷன் என்றாகிவிட்டது. இது ஒரு பக்கமிருக்க, 10 வயதுப் பிள்ளைகளுக்குக் கூட அங்கொன்றும், இங்கொன்றுமாக நரை எட்டிப் பார்ப்பதும் சகஜமாகி விட்டது. நரையை எப்படித் தவிர்ப்பது என்பதைவிட, அதை எப்படி மறைப்பது என்பதுதான் எல்லோரின் கவலையும். எட்டிப் பார்க்கிற ஒன்றிரண்டு வெள்ளை முடிகளை மறைக்க டை அடிக்க ஆரம்பித்து, ஒரு கட்டத்தில் டை அடிக்காமல் வெளியே தலையே காட்ட முடியாத நிலைக்குத் தள்ளப்படுவார்கள். கூந்தலைக்
கருப்பாக்குகிற வேலையுடன் சேர்த்து, கூடுதலாக அலர்ஜி முதல் புற்றுநோய் வரை பல பயங்கரங்களையும் போனஸாக கொடுக்கத் தவறுவதில்லை இந்தச் சாயங்கள். எந்த ஹேர் கலர் நல்லது? ஆபத்தில்லாதது? இயற்கையான முறையில் நரையை மறைக்க என்ன செய்யலாம்? எல்லாவற்றையும் பற்றி விளக்கமாகப் பேசுகிறார் அழகுக்கலை நிபுணர் ஷீபா தேவி. ”அரைகுறை விழிப்புணர் வின் காரணமாக, சமீப காலமாக அமோனியா ஃப்ரீ எனக் குறிப்பிடப்பட்ட ஹேர் டைதான் சிறந்தது என நினைத்து அதைத் தேடி வாங்கி உபயோகிக்கிறார்கள் மக்கள். ஹேர் கலர்களில் உள்ள அமோனியா மட்டும் ஆபத்தானதல்ல.. அதைவிட பயங்கரமான சோடியம் கார்பனேட் ஹைட்ர ஜன் பெராக்சைடு, பெட்ரோலியம் ஜெல்லி, மெதைல் பினால், நெஃப்தால் போன்ற ரசாயனங்களும் அவற்றில் உள்ளன. இவற்றை உபயோகிப்பதால் ரத்த புற்றுநோய், சிறுநீர்ப்பை புற்று நோய், தோல் எரிச்சல், ஒவ்வாமை, முடி உடைதல், சரும நிறமாற்றம், ஆஸ்துமா, நுரையீரல் வீக்கம் போன்ற பிரச்னைகள் வரலாம்! எப்படித் தேர்ந்தெடுப்பது? மருத்துவர் அல்லது அழகுக்கலை நிபுணரிடம் உங்கள் கூந்தல் மற்றும் மண்டைப் பகுதி யின் தன்மைக்கேற்ற சரியான ஹேர் கலரிங்கை கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். ஹெர்பல் டை அல்லது ஹேர் கலர் என்கிற விளம்பரத்துடன் விற்பனையாகிற அனைத்தும் முழுக்க முழுக்க மூலிகைகள் கலப்பால் தயாரிக்கப்பட்டவை அல்ல, அவற்றிலும் ஆபத்தான கெமிக்கல்களின் கலப்பு உண்டு என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். தற்காலிக ஹேர் கலர், நிரந்தர ஹேர் கலர், அரை நிரந்தர ஹேர் கலர் என கலரிங்கில் பல வகை உண்டு. தற்காலிக ஹேர் கலர் என்பது 15 முதல் 20 நாட்கள் வரை இருக்கும். செமி பர்மனென்ட் எனப்படுகிற அரை நிரந்தர கலர்கள் அதைவிட இன்னும் சில வாரங்கள் கூடுதலாக இருக்கும். நிரந்தர ஹேர் கலர் என்பதால் அதை ஒரு முறை போட்டுக் கொண்டால் பிறகு காலத்துக்கும் அப்படியே இருக்கும் என நினைக்க வேண்டாம். இது வேர்க்கால்கள் வரை சென்றா லும் 20-28 ஷாம்பு வாஷ் கொடுத்ததும் போய்விடும். ஹேர் கலரிங் செய்வதற்கு முன்… அலர்ஜி வருமா? இல்லையா என்பதை முதலில் பரிசோதனை செய்ய வேண்டும். ஹேர் கலர் கொஞ்சம் எடுத்து டெவலப்பருடன் சேர்த்துக் கலக்குங்கள். காது ஓரத்தில் கொஞ்சம் முடிக்கு மட்டும் அப்ளை செய்து வாஷ் பண்ணுங்கள். 48 மணி நேரத்துக்குப் பிறகு அந்த இடத்தில் எரிச்சல், தடிப்பு, அலர்ஜி எதுவும் இல்லை என்றால் உபயோகிக்கலாம். ஹேர் கலர் உபயோகிப்பதற்கு முன்பு ஹேர் வாஷ் அவசியம். நீண்ட நேரம் ஹேர் கலரை தலையில் வைக்கக் கூடாது. ரசாயனப் பொருட்கள் உடலினுள் இறங்கும் என்பதால் குறிப்பிட்ட நேரத்தில் கூந்தலை அலசி விட வேண்டும். ஹேர் கலரிங் செய்து 3 நாட்கள் ஆன பிறகு எண்ணெய் உபயோகிக்கலாம். கண் புருவத்தின் மேல் கலரிங்கை உபயோகிக்கக் கூடாது. ஹென்னா உபயோகிக்கலாமா? பச்சை மருதாணியை அரைத்து அப்படியே தலையில் பூசுவது, கருப்பு ஹென்னா என்கிற பெயரில் வருகிற கலர்களை உபயோகிப்பது போன்றவை தவிர்க்கப்பட வேண்டும். தரமான மருதாணிப் பொடியுடன், கூந்தலை வறண்டு போகாமல் காக்கும் கண்டிஷனர்களும் சேர்த்துக் கலந்தே உபயோகிக்க வேண்டும். மருதாணிப் பொடி ஒரு கப், தேயிலை நீர், எலுமிச்சைச் சாறு இவற்றை முதல் நாளே கலந்து வைத்து 1 மணி நேரம் தலையில் ஊறவைத்து குளிக்க வேண்டும். வேறு என்ன செய்யலாம்? வெந்தயம், வால்மிளகு, சீரகம் மூன்றையும் சம அளவு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தேய்த்து வரவும். மருதாணி, கறிவேப்பிலை, வேப்பிலை இவை முன்றையும் பொடி செய்து எண்ணெயில் போட்டு உபயோகித்தால் நரைமுடி தடுக்கப்படுவதுடன் முடி நன்றாக கருப்பாக வளரும். மரிக்கொழுந்து, நில ஆவாரை இரண்டையும் அரைத்து அரைமணி நேரம் தலையில் ஊறவைத்து குளித்தால் செம்பட்டை மாறி முடி கருப்பாகும். ஆலிவ் ஆயில், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சம அளவு கலந்து தடவலாம். கறிவேப்பிலை, பீட்ரூட், பீன்ஸ், நாவல்பழம், வெல்லம், சுண்டைக்காய், முருங்கைக்கீரை, முட்டை, பேரீச்சம்பழம், செம்பருத்தி பூ, திரிபலா சூரணம் இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளவும்.

செவ்வாய், 11 நவம்பர், 2014

தண்ணீர் குடிப்பது அவசியம்

தண்ணீர் குடிப்பது அவசியம்:

Posted By Muthukumar On November 11,2014
WATER
* சிறு வயதிலிருந்தே, தேவையான அளவு தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை பெற்றோர் ஏற்படுத்தவேண்டும். இதன்மூலம் உடல்வளர்ச்சியும், சுறுசுறுப்பான வாழ்க்கையும் இவர்களுக்கு அமையும். பெரியவர்கள் தினமும் 8 டம்ளர் தண்ணீர் குடித்தால் நோய்களிலிருந்து காத்துக்கொள்ளலாம்.
* சிறுநீரகம் நன்றாக வேஅலி செய்யவும் தேவையான தண்ணீர் குடிகக்வேண்டியது அவசியம். மூட்டு வலி முதுகுவலி பாதிப்பை தவிர்க்கவும்,தோல் வறட்சி ஏற்படாமல் தடுக்கவும் தண்ணீர் குடிக்கவேண்டும். நல்ல தண்ணீர் அருந்துவது உடல்வலியினை நன்கு குறைக்கும்.
* கழிவுப் பொருட்கள் தண்ணீர் உதவியால், ‘லிம்பாடிக்’ குழாய்களின் மூலம் குடல், சிறுநீரகம் வழியாக வெளியேறுகின்றது. நன்கு தண்ணீர் குடிப்போருக்கு சிறுநீரக கல் உருவாகும் வாய்ப்பு குறைவு. தண்ணீர் குடிப்பதே மூட்டுகளில் வழுவழுப்பு தன்மைக்கு உதவுகின்றது.
* தசைப் பிடிப்பு, சோர்வு போன்றவை உடற்பயிற்சி செய்யும்போது ஏற்படுவதன் காரனம் போதிய தண்ணீர் குடிக்காமையே. புரதம் உடலில் சரிவர இருந்தாலே நல்ல சதை உருவாகும். இந்த புரதம் உடலில் சரியான முறையில் உருவாக்க தண்ணீரே காரணம். இல்லையெனில் அதிக கொழுப்பு உடைய உடலாகிவிடும்.
* உங்கள் தண்டுவடம் நன்கு தண்ணீர் எடுத்துக்கொண்டால், முதுகுவலி குறையும். உடலில் கொழுப்பு அதிகம் சேர்ந்து உடல் பெருத்துவிடும். அதனால் தண்ணீர் குடிப்பதையும் ஒரு பழக்கமாக்கிக்கொள்ளுங்கள். ,
* சிலர் தாகத்தை பசி என்று தவறாக எடுத்துக்கொண்டு அடிக்கடி உண்பர். முதலில் தண்ணீர் அருந்த முறையற்று உணவு அருந்தும் பழக்கம் நின்றுவிடும்.
* சாப்பிடுவதற்கு முன்னால் 1 டம்ளர் தண்ணீர் அருந்தினால், ‘ டயட்’ செய்யவேண்டிய அவசியமில்லை. உணவு குறைவாக தேவைப்படும். உடல் எடையும் குறையும்.

தழும்புகளில் இருந்து தப்பிக்கணுமா?

Posted By Muthukumar On November 11,2014

நேற்றுவரை கண்ணாடி மாதிரி பளபளத்த சருமத்தில், இன்று திடீரென சின்னதாக ஒரு கரும்புள்ளியோ, பருவோ வந்தால் அது தரும் மன உளைச்சல் மிகவும் பெரியது. அதிலும் அந்தக் கரும்புள்ளியோ, பருவோ வந்தோமா, போனோமா என இல்லாமல், வந்துவிட்டுப் போனதன் தடமாக தழும்பை விட்டுச் சென்றால்? தழும்புகளைப் பார்க்கும் போதெல்லாம் தன்னம்பிக்கை குறையும். தூக்கம் தொலையும். தழும்புகளற்ற சுத்தமான சருமத்துக்கு மனது ஏங்கும். ”சரியான காரணம் தெரிந்து, சிகிச்சை அளித்தால், தழும்புகளை விரட்டுவது
இன்று மிகவும் சுலபம் என்கிறார் அழகுக் கலை நிபுணரும், அரோமா தெரபிஸ்ட்டுமான கீதா அஷோக். தழும்புகளைப் புரிந்து கொள்ளவும் அவற்றி லிருந்து தப்பிக்கவும் ஆலோசனைகள் சொல்கிறார் அவர். ”அம்மைக்குப் பிறகு வந்தது, பருக்கள் விட்டுச் சென்றது என தழும்புகளில் 2 வகை உண்டு. இரண்டுக்கும் தனித்தனி அணுகுமுறையும் சிகிச்சையும் அவசியம். பருக்களைக் கிள்ளுவதாலோ, உடைப்பதாலோதான் பரு உண்டாகும் என்பது பரவலான கருத்து. அது மட்டுமே காரணமில்லை. பருக்களில் பல வகை உண்டு. அவற்றில் ஒன்று சிஸ்டிக் அக்னே என்பது. பாரம்பரியமாகத் தொடரக்கூடிய இந்த வகைப் பரு, அளவுக்கு அதிக எண்ணெய் சுரக்கும் சருமம் கொண்டவர்கள், தலையில் ஃபங்கஸ் உள்ளவர்களுக்கு அதிகம் வரும். இந்தப் பரு உள்ள நபர்களின் மண்டைப் பகுதியை ஸ்கேன் செய்து பார்த்தால் உள்ளே ஃபங்கஸ் மற்றும் பாக்டீரியா தொற்று இருப்பதைப் பார்க்கலாம். சிஸ்டிக் அக்னேவை கிள்ளாமலும், உடைக்காமலும்கூட அது தழும்பை விட்டுச் செல்லும். அந்தளவுக்குக் கொடுமையான குணம் கொண்டது. ஒன்றிரண்டு பரு கிளம்பும் போதே மண்டைப் பகுதியை ஸ்கேன் செய்து பார்த்து, இன்ஃபெக்ஷன் இருக்கிறதா எனத் தெரிந்து கொண்டு, மூல காரணத்தை அறிந்து அதற்கேற்ற சிகிச்சையைத் தொடங்கினால், தழும்புகளில் இருந்து தப்பிக்கலாம். டிஸ்க்ரன்ட்டேஷன் தெரபி என்கிற சிகிச்சையின் மூலம் இவர்களுக்குச் சுரக்கிற அதிகப்படியான எண்ணெயைக் கட்டுப்படுத்தலாம். அதன் மூலம் பருக்களும் அதிகரிக்காது. தழும்புகளும் வராது. – சிஸ்டிக் அக்னே உள்ளவர்களது சருமத் துவாரங்கள் அகண்டு, பெரிதாக இருக்கும். வெளியில் செல்லும் போது சருமத்துக்கு எந்தவிதப் பாதுகாப்பும் இல்லாமல் சென்றார்களானால், இவர்களது சருமத்திலிருந்து சுரக்கும் சீபம் என்கிற எண்ணெய் பசையானது வெளியே கசிந்து, வெளிப்புற மாசுடன் சேர்ந்து சருமத் துவாரங்களை அடைத்துக் கொள்ளும். துவாரங்கள் பெரிதாக இருப்பதால் பருக்களும் பெரிய கொப்புளங்கள் போலவே வரும். இவர்கள் தலையில் பொடுகு இருக்கிறதா என்பதற்கான பரிசோதனையை செய்து பார்த்து, அதற்கான சிகிச்சையை மேற்கொண்டாலே பருவையும் அது விட்டுச் செல்கிற தழும்பையும் விரட்டலாம். இதெல்லாம் வராமல் தவிர்ப்பதற்கான வழிகள். ஏற்கனவே பரு வந்து, தழும்புகளும் தங்கி விட்டவர்கள் என்ன செய்யலாம்? வெறும் ஃபேஷியல் மட்டுமே தழும்புகளைப் போக்காது. மைக்ரோடெர்மாப்ரேஷன் மற்றும் மீசோதெரபி என்கிற இரண்டு சிகிச்சைகளும் இவர்களுக்குப் பலன் தரும். தழும்பு ஏற்பட்டவர்களது சருமத்தில் குழிகள் காணப்படும். மைக்ரோடெர்மாப்ரேஷன் என்கிற சிகிச்சை, சருமத்தை சமன்படுத்தி, குழிகளை மறைக்கும். 95 சதவிகிதம் தழும்புகள் மறையும். 100 சதவிகிதம் தெரியாமலிருக்க ஸ்கின் பீல் சிகிச்சை மட்டுமே தீர்வு. சருமத்தின் ஒரு லேயரை அப்படியே உரித்தெடுத்து, சருமத்தைப் புதுப்பிக்கச் செய்கிற இந்த சிகிச்சைக்குப் பிறகு சூரிய வெளிச்சமோ, வீட்டுக்குள் பல்பு வெளிச்சமோகூட படக்கூடாது. வெளிச்சம் பட்டால், ஸ்கின் பீல் செய்யப்பட்ட சருமம் கருப்பாகி, அது நிரந்தரமாகத் தங்கி விடும். மைக்ரோடெர்மாப்ரேஷன் மற்றும் மீசோ தெரபி சிகிச்சை களை 20 வயதுக்கு மேலானவர்கள் செய்து கொள்ளலாம். 30 வயதுக்கு மேலானவர்கள் வாரம் 2 முறை மைக்ரோடெர்மாப்ரேஷன் செய்து கொள்ளலாம். தழும்புகளை நீக்குவதில் அரோமாதெரபி சிகிச்சைக்குப் பெரும் பங்கு உண்டு. அது சருமத்தில் புதிய செல்கள் உருவாக உதவும்.மைக்ரோடெர்மாப்ரேஷன் சிகிச்சையுடன், சைப்ரஸ் ஆயில், நட்மெக் ஆயில், பெர்கமாட் ஆயில், பெடிட்க்ரெயின் ஆயில், சாண்டல்வுட் ஆயில் ஆகியவை கலந்த அரோமா தெரபியையும் சேர்த்துக் கொடுக்கும் போது, தழும்புகள் நீங்கி, சருமம் புத்துணர்வு பெறுவது துரிதப்படுத்தப்படும். வீட்டிலேயே என்ன செய்யலாம்? தழும்புகள் சின்னதாக இருக்கும்போதே கவனித்து, சில சிகிச்சைகளைச் செய்ய ஆரம்பித்தால், அவை பெரிதாகாமலும் நிரந்தரமாகத் தங்காமலும் காக்கலாம். நெருஞ்சி முள் தூள் 100 கிராம், கறிவேப்பிலை தூள் 100 கிராம், கஸ்தூரி மஞ்சள் தூள் 100 கிராம், கசகசா தூள் 10 கிராம் ஆகியவற்றை காய்ச்சாத பாலில் குழைத்துக் கொள்ளவும், இரவு படுக்கப் போவதற்கு முன் சருமத்தில் தழும்புகளின் மேல் தடவிக் கொண்டு தூங்கவும். மறுநாள் காலையில் அதைத் தேய்த்துக் கழுவவும். சில நாட்களுக்குத் தொடர்ந்து இப்படிச் செய்து வர, சின்னத் தழும்புகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். முகச் சருமத்தை லேசாக, மிக மென்மையாகக் கிள்ளி விடுகிற சிகிச்சையை 20 வயதுக்கு மேல் எல்லோருமே ஒரு பயிற்சியாகச் செய்யலாம். சருமத்தின் மூன்றாவது அடுக்கான சப்கியூட்டேனியஸ் லேயரில்தான் சருமத்தின் மீள் தன்மைக்குக் காரணமான கொலாஜன் மற்றும் எலாஸ்டின் எனப்படுகிற கொழுப்பு செல்கள் இருக்கின்றன. லேசாகக் கிள்ளி விடுவதன் மூலம் இந்த செல்கள் தூண்டப்பட்டு மேலெழுந்து வரும். கன்னம் ஒட்டிப் போனவர்கள் கூட இந்த கிள்ளி விடுகிற பயிற்சியைத் தொடர்ந்து செய்து வந்தால், கன்னங்கள் ஓரளவு உப்பிப் பூரிக்கும். முகத் தசைகள் விரிவடைகிற போது, தழும்புகளின் அளவு சுருங்கும். பார்வைக்கு உறுத்தலாகத் தெரியாது. தினசரி காலையில் பல் துலக்கும் போது, வாய் நிறைய தண்ணீரை வைத்துக் கொள்ளவும். வாய் வலிக்கும் வரை வாயிலேயே வைத்திருந்து விட்டு பிறகு துப்பவும். இப்படிச் செய்வதாலும் கன்னத் தசைகள் விரிவடையும். தழும்புகள் மறையும். மேலே சொன்னதெல்லாம் பருக்களால் உண்டான தழும்புகளுக்கு… அடுத்தது அம்மைத் தழும்புகளுக்கான சிகிச்சை அம்மை வந்த பிறகு ஏற்படுகிற தழும்புகள் அத்தனை சீக்கிரத்தில் மறையாது. லேசர், ஸ்கின் பீல் மாதிரியான நவீன சிகிச்சை களால் கூட 100 சதவிகிதம் போக்க முடியாது. தழும்புகள் ஆழமாவதற்கு முன்பே அக்கறை எடுத்துக் கொண்டால், ஓரளவு இந்தப் பிரச்னையிலிருந்து விடுபடலாம். அம்மை வந்து கொப்புளங்கள் ஆறிய உடனே அந்த சிகிச்சையைத் தொடங்க வேண்டும். காலம் தாழ்த்தினால் தழும்புகள் ஆழமாகி விடும். கொப்புளங்கள் ஆறிய நிலையில் சருமமானது மிகவும் மென்மையாக இருக்கும். அம்மை வந்ததில் இருந்தே தினமும் இளநீர் குடிக்க வேண்டும். அது உடலுக்குக் குளிர்ச்சியைத் தருவதோடு, சருமத்துக்குத் தேவையான தண்ணீர் சத்தையும் தக்க வைக்கும். கார்ன் ஃப்ளோர் 1 டீஸ்பூன், புதினாவை காயவைத்து அரைத்த தூள் 1 டீஸ்பூன், மர மஞ்சள் தூள் 1 டீஸ்பூன், நட்மெக் ஆயில் 2 சொட்டு, ரோஸ்மெர்ரி ஆயில் 1 சொட்டு, சிடர்வுட் ஆயில் 1 சொட்டு எல்லாவற்றையும் சிறிது தண்ணீரில் குழைக்கவும். அம்மைத் தழும்புகளின் மேல் மென்மையாகத் தடவவும். அதை முற்றிலும் காய விடக் கூடாது. லேசான ஈரத்துடன் இருக்கும் போதே குளிர்ந்த தண்ணீர் விட்டு, மென்மையாகக் கழுவி விட வேண்டும். தொடர்ந்து 10 நாட்களுக்கு இப்படிச் செய்து வந்தாலே தழும்புகள் மறைந்து விடும்.

வெள்ளி, 26 செப்டம்பர், 2014

நோய் அண்டாமல் இருக்க கைகொடுக்கும் காய்கறிகள்

 

காய்கறிகளில் நார்ச்சத்து, வைட்டமின், கனிமங்கள் உள்ளிட்ட சத்துக்கள் அதிகம். காய்கறிகளை எவ்வளவு சாப்பிட்டாலும், உடல் எடை கூடாது; காரணம், அவற்றில் கலோரி அளவு ரொம்ப கம்மி. பச்சை மற்றும் ஆரஞ்சு நிற காய்கறிகளை உண்பதால், தொண்டை புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் பாதிப்பை தள்ளிப் போடலாம். இந்த வகை காய்கறிகளில், பீட்டா கரோடின், வைட்டமின் – ஏ சத்துக்கள் நிறைந்திருப்பதே காரணம்.
பீட்டா கரோடின், புற்றுநோயைத் தடுக்கக்கூடியது. கேரட், இனிப்பு உருளைக் கிழங்கு, காலி பிளவர், நுால்கோல் போன்றவை, இந்த வகை காய்கறிகளில் அடங்கும்.
* நெல்லிக்காய், எலுமிச்சை ஆகியவற்றில், அதிக அளவு வைட்டமின் – சி இருப்பதால், இவற்றை சாப்பிடுவதாலும் புற்றுநோய் வராமல் தவிர்க்கலாம்.
* இதுதவிர, மிளகு, முட்டைகோஸ், தக்காளி, கீரைகள் உள்ளிட்ட பச்சை நிற காய்கறிகளிலும் அனைத்திலுமே வைட்டமின் – சி
உள்ளது. உணவில் இவற்றை சேர்த்துக் கொண்டால், நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும்.
* சில காய்கறிகளில் இரும்புச் சத்துக்கள் அதிகம் இருக்கும். இவற்றால் உடலின் ரத்தம் தூய்மையாவதுடன், உடலுக்குத் தேவையான சக்தியும் கிடைக்கிறது. மிகக் குறைவான இரும்புச் சத்து காரணமாக, ‘அனீமியா’ எனப்படும் ரத்த சோகை நோய் ஏற்படும். பட்டாணி, கொண்டைக் கடலை உள்ளிட்ட பயறு வகைகள், பீட்ரூட், உருளைக் கிழங்கு ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகம்.
* முட்டைகோஸ் போன்ற கரும்பச்சை நிற காய்கறிகளில் கால்சியம் அதிகம். எலும்பு மற்றும் பற்களுக்கு இவை ரொம்ப அவசியம்.
* உடலின் சக்திக்கு பொட்டாசியம் அவசியம். பழங்கள், காய்கறிகளில் அதிகளவு பொட்டாசியம் உள்ளது. பழங்கள், காய்கறிகளில் ‘அமினோ’ அமிலங்களும் உள்ளதால். உடலின் சுரப்பி செயல்பாடுகளை பராமரிக்க உதவுகிறது.

சில கீரை வகைகளும் அதிலுள்ள சத்துக்களும்!


ஆரோக்கிய உணவில் முதலிடம் வகிப்பது கீரைதான். இதை உண வில் தினமும் சேர்த்து வந்தால் நோய் நொடி அண்டாது. ஒவ்வொரு
கீரைக்கும் உள்ள சத்துக்களை காண்போம்.
முருங்கைக் கீரை –
விட்டமின் ஏ,பி,சி, கணிசமான அளவு இரும்புச் சத்துள்ளது. செரிமானம் குறைந்த குழந்தைகள், இதய நோயாளிகள் இரவில் சாப்பிடக் கூடாது. கண் பார்வையைத் தெளிவாக்கும் குணம் கொண்டது. தாது பலம் பெருகும்.
வெந்தயக் கீரை-
இரும்புச் சத்து, விட்டமின் ஏ,சுண்ணாம்பு சத்து கொண்டது. வளரும் குழந்தை களுக்கும் மூல வியாதிக் காரர்களுக்கும் நீரிழிவு நோயாளிக்கும் ஏற்றது. சூட்டைத் தணித்து உடலு க்கு வலுவூட்டும்.
அகத்திக் கீரை-
விட்டமின் ஏ மற்றும் சுண்ணாம்பு சத்து கொண்டது. வாய் மற்றும் வயிற்றில் புண் உள்ளர்வர்கள் இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வர உடனடி நிவாரணம் கிடைக்கும். மற்ற மருந்துகள் சாப்பிடும் போது இதைச் சாப்பிடக்கூடாது. வயதானவர்கள் சூப் பதத்தில் மட்டுமே சாப்பிட வேண் டும்.
பசலைக் கீரை 
வைட்டமின் ஏ 5580 மைக்ரோ கிராம், கால்ஷியம், பாஸ்பரஸ் , இரும்பு 1.14 மி.கி., பொட்டா ஷியம் 306 மி.கி ஆகியவை உள்ளன. பார்வைக் கோளா றைக்தடுக்க உதவும் வைட்டமின் ஏ உடல் சோர்வைத்தடுக்க உதவும் பொட்டாஷியச்சத்து ஆகியவை பசலைக்கீரையில் உள்ள ன.
மணத்தக்காளி-
விட்டமின் பி12, மற்றும் ஏரி போப்வி ன் கொண்டது. வாய்ப்புண் மற்றும் வயிற்றுப் புண் உள்ளவர்களுக்கு நல்லது, உடல் சூட்டைக் குறைக்கும். காயத்தை ஆற்றும். வயிற்றில் பூச்சி கள் உருவாகாமல் தடுக்கும்.
வல்லாரை-
செரடோனியம் கொண்டது. பள்ளிக் குழந்தைக ளுக்கு வாரத்தில் ஒரு முறையாவது செய்து தர வேண்டும். மூளைக்கு வலுவூட்டி நினைவாற்ற லைப் பெருக்கும் தன்மை கொண்டது.
புதினா-
இரும்பு, சுண்ணாம்பு சத்து, விட்டமின்சி, விட்டமின் டி கொண்டது, ஆஸ்துமா நோயாளிகளுக்கு நல்லது. மூல நோய், தொண்டையில் ரணம். குடல் புண் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. பசியையும் நாக்கின் ருசியையும் தூண்டக் கூடியது. செரிமானத்துக்கு உதவும்.
கொத்துமல்லி-
விட்டமின் பி, பி2 மற்றும் விட்டமின் சி கொண்டது. எல்லோருக்கும் நல்லது. நோய் எதிர்ப்பு சக்தியை க் கொடுக்கும். பித்தத்தைக் குறைக்கும். நாவின் ருசியைத் தூண்டும்.
*
முளைக்கீரை-
undefinedதாது உப்புகள் மற்றும் விட்டமின் ஏ கொ ண்டது. உடல் தளர்ச்சியைப் போக்கும். சதை ப்பிடிப்பு இல்லாதவர்கள் அடிக்கடி சாப்பிட லாம். ஆஸ்துமா நோயாளிகள். தலையில் நீர் கோத்து இருப்பவர்கள் சாப்பிடக் கூடாது. உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும்.

எல்லாத்துக்கும் வைத்தியம்


எடுத்ததுக்கெல்லாம் டாக்டரை தேடி ஓடுவதை தவிர்க்க, தினமும் நாம் உட்கொள்ளும் உணவில் சில பொருட்களை சேர்த்துக் கொண்டலே போதும்; நலமுடன் வாழலாம். அதற்கு உதவும் சில எளிய வைத்தியக் குறிப்புகள் இதோ:
* சீதபேதி கடுமையாக இருந்தால், ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து, தயிரில் கலந்து மூன்று வேளை கொடுக்க குணமாகும்.
* அடிக்கடி ஏப்பம் வந்தால், வேப்பம்பூவை தூள் செய்து, நான்கு சிட்டிகை எடுத்து, இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.
* உலர் திராட்சைப் பழத்தை, வெது வெதுப்பான தண்ணீரில் அரைமணி நேரம் ஊற வைத்து, காலையில் அருந்தினால், மாதவிடாய் கோளாறுகள், இதய நோய் தீரும்.
* வல்லாரைக் கீரையை நிழலில் காய வைத்து, பொடித்து, தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால், நினைவாற்றல் பெருகும்.
* வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து, நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி, நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால், முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.
* வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால், புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடியுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.
* புதினா விதையை வாயில் போட்டு மென்றுக் கொண்டிருந்தால், பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும்.
* கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால், கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.
* எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால், உஷ்ணம் குறையும்.
* நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக, வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து, குடித்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
* பூச்சி கடித்து வலி, வீக்கம் ஏற்பட்டால், வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்த்தால் விஷம் பரவாது. கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.
* தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது, ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம்; தேவைப்பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்க சுவையாக இருக்கும்.
* கொப்பரைத் தேங்காயை கசகசா வுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும்.
* பச்சை கொத்தமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.
* தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.
* வெள்ளைப் பூசணிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். ரத்தக் கொதிப்பு, கொலஸ்ட்ரால், தலைசுற்றல் எல்லாவற்றையும் பூசணிக்காய் கட்டுப்படுத்தும்.
* ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும்.
* சாதம் வடித்த கஞ்சியை எடுத்து, ஆறவைத்து, ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால், இடுப்பு வலி நீங்கும்.
* அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து, கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.

திங்கள், 22 செப்டம்பர், 2014

வெந்நீர் குடித்து நிவாரணம் பெறுங்கள்!


வெறும் தண்ணீர் மட்டுமல்ல; வெந்நீரிலும் மருத்துவ குணம் நிறையவே இருக்கிறது. சிறுநீரகத்தை பாதுகாக்க, தினந்தோறும் மூன்று லிட்டர் தண்ணீர் குடியுங்கள் என்று, தண்ணீரின் மகத்துவம் பற்றி, விழிப்புணர்வு பிரசாரம் நடக்காத இடமே இன்றைக்கு இல்லை.
அதற்கு இணையாக, வெந்நீரும் உடல் நலத்திற்கு உகந்தது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
அப்படியென்ன பலன்களை வெந்நீர் தந்து விடப் போகிறது என, சிந்திப்போருக்காக, சில விஷயங்கள் இதோ:

வடை, பக்கோடா, பூரி என, எண்ணெயில் பொரித்த அயிட்டங்களையோ அல்லது இனிப்புகளையோ சாப்பிட்ட பின் நெஞ்சுக்குள் சிலருக்கு எரிச்சல் தோன்றும். உடனே நாம் எடுப்பது, ‘ஜெலுசில் அல்லது டைஜின்’ மாத்திரைகளை தான். ஆனால், அதெல்லாம் தேவையில்லை. ஒரு டம்ளர் வெந்நீரை எடுத்து, மெதுவாக பருகுங்கள் போதும். கொஞ்ச நேரத்தில் நெஞ்சு எரிச்சல் போன இடம் தெரியாது.
* உண்ட பின், சுடச்சுட வெந்நீர் குடித்தால், உடலில் அதிகப்படி சதை போடுவதை தடுக்க முடியும். மலச்சிக்கல் உள்ளவர்களுக்கும், வெந்நீர் கைகண்ட மருந்து. உடனடி நிவாரணம் நிச்சயம்.
* உடம்பு வலியா? வெந்நீரில் கொஞ்சம் சுக்குத்தூள், பனங்கற்கண்டு போட்டு குடித்தால் போதும். பித்தத்தினால் வரும் வாய்க்கசப்பு நீங்கி விடும். மேலும், உடல் வலிக்கு, நன்றாக வெந்நீரில் குளித்து, இந்த சுக்கு வெந்நீரையும் குடித்துவிட்டுப் படுத்தால், நன்றாகத் தூக்கம் வருவதோடு, வலியும் பறந்து விடும்.
* கால் கடுக்க நின்றாலோ, அலைந்து திரிந்தாலோ, கால் பாதங்கள் வலி எடுக்கும். அதற்கும் வெந்நீர் தான் உடனடி மருத்துவம். பெரிய வாளியில், சூடு தாங்கும் அளவுக்கு வெந்நீர் ஊற்றி, அதில் உப்புக்கல்லைப் போட்டு, அதில் கொஞ்ச நேரம் பாதத்தை வைத்தால் சிறந்த நிவாரணம் கிடைக்கும். காலில் அழுக்கு இருக்குமானால், வெந்நீரில் கொஞ்சம், ‘டெட்டால்’ ஊற்றுங்கள்; காலில் இருந்த வலியும் போகும்; அழுக்கும் நீங்கும்.
* வெந்நீரில், ‘விக்ஸ்’ அல்லது அமிர்தாஞ்சனம் போட்டு, அதில் முகத்தைக் காண்பித்தால், மூக்கடைப்பில் இருந்து விடுதலை பெறலாம். திடீரென்று தலை வலிக்கிறது என்றால், உடனே, டீ, காபியை தேடாதீர்கள். ஒரு டம்ளர் வெந்நீர் குடியுங்கள். அஜீரணக் கோளாறு, குடலில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் கூட தலைவலி ஏற்படலாம்.
* கிராமங்களில் வாரம் ஒருமுறை சுக்கு வெந்நீர் தயாரித்து, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடிப்பர். உணவு கட்டுப்பாடு இல்லாமல், அஜீரணக் கோளாறுக்கு ஆளாவோர், சுக்கு வெந்நீரை வாரந்தோறும் அருந்தி வந்தால், உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேராமல் தவிர்ப்பதோடு புத்துணர்ச்சியையும், சுறுசுறுப்பையும் தரும்.
* வீட்டில் பாத்திரம் தேய்த்து, துணி துவைக்கும் பெண்கள், வாரத்திற்கு ஒரு முறையேனும் உங்கள் கைகளை வெந்நீரில் கொஞ்ச நேரம் வைத்திருங்கள். இதன் மூலம் நக இடுக்கில் இருக்கும் அழுக்குகள் போய், உங்கள் கைகள் ஆரோக்கியமாக இருக்கும்.
* வெயிலில் திரிந்து விட்டு, வீடு திரும்பியதும் தாகத்தை போக்க, ஐஸ் வாட்டர் குடிக்காதீர்கள். சற்று வெதுவெதுப்பான வெந்நீர் அருந்துவது, தாகம் தீர்க்க நல்ல வழி. ஈஸ்னோபோலியா, ஆஸ்துமா போன்ற நோய்கள் இருப்போர், தாகம் எடுக்கும்போதெல்லாம் கண்டிப்பாக, வெந்நீர் தான் அருந்த வேண்டும். விருந்துகளில், செமையாக கட்டி முடித்ததும், கூல் டிரிங்க்ஸ், ஐஸ் கிரீம்ஸ் பக்கம் போகாமல், ஒரு கிளாஸ் வெந்நீர் குடியுங்கள்; உடம்புக்கு நல்லது.
* ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல; வீட்டு உபயோகத்திற்கும் வெந்நீரின் உதவி பெரிது. நெய், எண்ணெய் இருந்த பாத்திரங்களை கழுவும்போது, வெந்நீரில் ஊற வைத்து, அப்புறம் கழுவினால் பிசுக்கே இருக்காது என்பது, பெண்மணிகளுக்கு தெரியாத விஷயமல்ல.
அதுபோலவே தரையை துடைக்கும்போது, குறிப்பாக குழந்தைகள், நோயாளிகள் இருந்தால், வீட்டின் தரைகளை வெந்நீர் உபயோகப்படுத்தி துடைத்தால் கிருமிகள் மடியும்.

செவ்வாய், 16 செப்டம்பர், 2014

கை, கால் பராமரிப்பு



தினமும் இரவில் வெந்நீரில், கல் உப்பு மற்றும் எலுமிச்சை ச் சாறு சிறிது ஷாம்பூ சேர்த் து இதில் நம் கால்களை ஊற வைத்து, தண்ணீர் சற்று சூடு ஆறிய பின் பாதத்தை (கடை யில் விற்கும்) பூமிக்ஸ்டோனை வைத்து, கால்க ளில் தேய்த்த பின், குளிர்ந்த நீரில் கால்களை
மூன்று நிமிடம் வைத்து பின்னர் மிருதுவான பருத்தித் துணியால்துடைத்த பின், தேங்காய் எண்ணெய் அல்லது மா ஸ்சரைசர் – ஐ கால்களில் தேய்த்து விடவும். இதே மு றையைக் கைகளுக்கும் செய்துவந்தால் கைகளும் , கால்களும் நன்கு பளபள க்கும்.
இம்முறை உங்களால் தி னமும் முடியவில்லை என்றால் குறைந்தபட்சம் வாரம் ஒருமுறையாவது இவ்வாறு செய்துவர வேண்டும். தினமும் தூங்கப்போகும்முன் கால்களை வெந்நீரி ல் ஊறவைத்து புதிதாக வாங்கிய பல் துலக்கும் பிரஸ்சால் கால்களைத் தேய்த் து நன்கு தூய்மை செய்யலாம்.
கால்களில் தேங்காய் எண்ணெய் தேய்த்து வந்தால், கால்கள் மிருதுவாக இருக்கும்.

சனி, 23 ஆகஸ்ட், 2014

“4 வகை அரவாணிகளும்”! பாலியல் மாற்று அறுவை சிகிச்சையும்!

Posted on  by Muthukumar

நான்கு வகை அரவாணிகளும்! பாலியல் மாற்று அறுவை சிகிச் சையும் – மருத்துவ/ அறிவியல் ரீதியான அலசல்
அரவாணிகளைப் பொறுத்தவரை, சா தாரணமான குடும்பங்களில் மற்றவர்க ள் மாதிரியேதான் பிறக்கிறார்கள். வளர வளர, அவர் களுக்குள் மாற்றம் நிகழ்கி றது. தங்கள் குழந்தைக்கு உயிரைக் கொல்லும் பயங்கர நோய் இருந்தால் கூட பாசம் காட்டும் குடும்பம், இந்த ஒரு விஷயத்தை மட்டும் ஏற்பதில்லை. கேலிப் பேச்சுகளுக்குப் பயந் து அப்பா, அம்மா, கூடப் பிறந்தவர்கள் என எல்லோரும் சித்ரவ தை செய்ய,
தைத் தாங்க முடியாமல் ஊரைவிட்டு ஓடுகிறார்க ள் அரவாணிகள். பிச்சை எடுப்பதும், பாலியல் தொ ழிலும்தான் அவர்களது கடைசிப் புகலிடமாகிறது.
அவ்வளவாக தேர்ச்சி பெ றாத சாதாரண டாக்டர்க ளிடம் அறுவை சிகிச்சை செய்து தங்கள் ஆணுறுப்பை அகற்றிக்கொள்ளும் அரவாணிகளி ல் பலர், வேறொரு ஆணை திருமணம் செய்து கொள்வதும் உண் டு.
சட்டம் இவர்கள் விஷயத்தில் இன் னமும் குழப்பமாகவே இருக்கிறது . தேர்தல் கமிஷனே அனுமதித்தும் பல மாநிலங்களில் இவர்களுக்கு ஓட்டுரிமை இல்லை. ரேஷன் கார் டு, பாஸ்போர்ட் என எல்லாவற்றி லும் ஆண், பெண் என இருபாலின ங்கள் மட்டுமே இருப்பதுதான் பிரச் னை. மூன்றாவது வகையை மனத ளவில்கூட அங்கீகரிக்கத் தயாராக இல்லாத நிலைதான்!
ஊனமுற்றவர்கள் மீது கருணை காட்டுவது போல அரவாணிகளை யும் சமூகம் நடத்த வேண்டும். அறி வியல் ரீதியாகப் பார்த்தால் அவர்க ள் அப்படித்தான்… பாலியல் ஊன முற்றவர்கள்!
மனிதசமுதாயம் இரண்டுவிதமான தோற்றங் களைத்தான் இயல்பாகப் பார்க்கப் பழகி இருக்கிறது. ஒன்று ஆண்… இன்னொன்று பெண்! இந்த இரண்டு மாதிரியாக வும் இல்லாமல் ஆணாகப் பிறந்து, பெண்ணாக வாழ முயலும் (இதே போல பெண்ணாகப் பிறந்து ஆணாக வாழ முயலும்) குழப்பமான அடை யாளங்களைக் கொண்டவர்கள், மூ ன்றாவது விதமான தோற்றம் கொ ண்டவர்கள். இவர்களை அறிவியல் பூர்வமாக “ட்ரான்ஸ்ஜெண்டர்” (Transgender) என்கிறார்கள். இத ற்குத் தமிழில் சரியான வார்த்தைகள் இல்லை. இந்த ட்ரான்ஸ் ஜெண்டர் என்பதை நான்கு ரகங்களாகப் பிரி க்கிறார்கள். இதற்கும் தமிழில் சரியா ன வார்த்தைகள் இல்லை. “அரவா ணி” கள் என்று சமூகத்தில் அழைக்கப்படுபவர்கள், இந்த நான்கு ரகத்தில் ஒரு பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று எடுத்துக் கொள்ள லாம். ஆனால், அதுகூட அறிவியல் ரீதி யில் எந்த அளவுக்குச் சரி என்று சொல் ல முடியாது. காரணம்… அரவாணி என் பதற்கு சரியான பொருள் என்ன என்பது இங்கே தெளிவுபடுத்தப்படவில்லை. அ தற்கான ஆராய்ச்சிகள் எதுவும் நடத்தப் பட்டதாகவும் தெரி யவில்லை.
சரி, நாம் அறிவியல் அடிப்படையில் மே லை நாட்டினர் பிரித்து வைத்திருக்கும் நான்கு ரகத்தினரையும் வரிசையாகப் பார்ப்போம்.
முதல் ரகத்தினர்,
“டிரான்வெஸ்ட்” என்று அழைக்கப்படுகி றார்கள். இவர்களின் செயல்பாடுகள் “டிரான்ஸ்வெஸ்டிஸம்” எனப்படும். இவர்களுக்கு உடைகளை மாற்றிப் போட்டுக் கொண் டால்தான் செக்ஸ் உணர்வு எழும். மனைவியின் புடவையைக்கட்டினால்தான் “மூட்” வரும். செ க்ஸுக்கு முன்னதாகக் கட்டாய ம் இப்படி அவர் உடை மாற்றிக் கொள்வார். அதன்பிறகே பரவசப் பட ஆரம்பிப்பார். இதுதவிர வே றெந்த குறையும் இருக்காது. இ ந்த உடை சிக்கல் தவிர மற்றபடி, “நான் இயல்பான ஆண்” என்கிற உணர்வு இவர்களுக்கு இருக்கு ம். பெண்களிடம்தான் செக்ஸ் உணர்வு கொள்வார்கள். இதே குறைபாடு கொண்ட பெண்களுக்கு அப்படியே உல் டாவாக ஆண் களின் உடைமீது ஆசை வரும். அது மட்டுமல்ல, செயல்களிலும் கொஞ்சம் வித்தியா சம் இருக்கும்.
இரண்டாவது ரகத்தினர்
“டிரான்ஸ் செக்ஸுவல்கள்”. இவர்களது உடலும்,உணர்வும் வேறுவேறாக இருக்கும். உடல்ரீதியாக இவர்கள் ஆணாக இருப்பார்கள். அதற்கான அடையா ளங்களாக மீசை, தாடி, ஆணுறுப்பு எல்லாம் இருக்கும். ஆனால், மனோ ரீதியாகத் தங்களை பெண்ணாக உணர்வார்கள். “நான் பிறக்கும்போ தே ஒரு பெண்தான்! ஆனால், கடவு ள் ஏதோ ஞாபகத்தில் தப்பு செய்து விட்டார். என்னைக் கொண்டுவந்து இந்த ஆம்பளை உடம்பில் போட்டு விட்டார்” என நினைப்பார்கள். தன் னை அமுக்கிக் கொண்டிருக்கும் இ ந்த ஆண் உடம்பிலிருந்து விடுபட முயற்சிப்பார்கள். ஆணுறுப்பி ன் மீது வெறுப்பு வரும். பெற்றோர், சமூகம் என எல்லோரும் ஆ ணாகப் பார்த்தாலும் “நான் பெண்தான்” என்ற உணர்வு இவர்களு க்கு ஆழமாக இருக்கும். இவர்களுக்கு சக ஆண்களைப் பார்த் தால்தான் செக்ஸ் உணர்வு வரும். பெண்களுடன் சகோ தர பாவத்தில் பழகுவார்கள். இதன் காரணமாக ஆணுறுப் பை அறுவை சிகிச்சை மூல ம் அகற்றிக்கொண்டு பெண் ணாக முயற்சிப்பார்கள். இ தேபோல பெண்ணாகப் பிற ந்தவர்கள், ஆணாகத் துடிப் பார்கள். மார்பகங்களை அக ற்றிவிட நினைப்பார்கள். மி குந்த சிரமப்பட்டு ஆண் குறியையும் உருவாக்கிக் கொள்வார்கள். இந்த வகையினரில்… ஆணாகப் பிறந்து, பெண் ணாகத் துடிப்பவர்கள்தா ன் அதிகளவில் அடையா ளம் காணப்பட்டுள்ளனர்.
ஆனால், இப்படி அறுவை சிகிச்சை செய்துகொள்வ தன் மூலம் இவர்கள் முழு மையான பெண்ணாக வோ… ஆணாகவோ ஆக முடியாது. அதற்கு வாய்ப்பே இல்லை.
மூன்றாவது ரகத்தினர்,
“இன்டர்செக்ஸ்” (நம்மூரில் “அரவாணிகள் என்று அழை க்கப்ப டுபவர்களை இந்த ரக த்தினர் என்று சொல்லலாம். ஆனால், அறுதியிட்டுக் கூற முடியாது. அதற்கான ஆராய் ச்சிகள் எதுவும் இங்கே நடக்கவில்லை). பிறப்புக் கோளாறு காரணமாக ஆண் அல்லது பெண் ஜனன உறுப் புகள் பரிபூரணமாக வளர்ச்சி அடைந் திருக்காது. இந்த ரகத்தினரில் ஆண்களாக நினைக்கப்ப ட்டவர்களுக்கு, ஆண் குறி இருக்கும். ஆனால், அது முழுமையாக இருக்காது. கூடவே பெண் குறி போன்ற அமைப்பும் இருக்கும். முக்கியமாக விதை இருக்காது.
பெண்ணாக நினைக்கப்பட்டவர் களுக்கு… பெண் குறி முழுமை யாக இருக்காது. பக்கத்தில் ஆ ண்குறி போன்ற முழுமை பெறா த அமைப்பு இருக்கும். முக்கியமாகக் கருப்பை இருக்காது.
இந்த ரகத்தினர் அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஆணாக வே… அல்லது பெண்ணா கவோ மாறிவிட்டதாக சொல் வார்கள். ஆனால், அதனால் எந்த பயனும் இல்லை. செக் ஸ் உணர்வு என்பது அதன் மூலம் பரிபூரணமாகக் கிடை க்காது. கர்ப்பப்பை என்பது இல்லாததால் குழந்தையும் பெற்றுக் கொள்ள முடியாது. விதை இல்லாததால் தந்தையாகவும் முடி யாது.
நான்காவது ரகத்தினர்
“யூனக்” என்று அழைக்கப் படுவார்கள். ஆண்கள் மட்டுமே இந்த ரகத்தில் உண்டு. விதை மற்றும் ஆண்குறியை வெட்டி எடுத்து விடுவார்கள். இவர்கள் முழுமை யான ஆண்கள்தான் என்றாலும் சூழல் காரணமாகக் குறியை வெ ட்டிக்கொள்கிறார்கள். இதற்கு மூன்று காரணங்கள் கூறப்படுகி ன்றன.
ஒன்று… அந்தக் காலத்தில் அந்தப் புர பாதுகாப்புக்காக மன்னர்களால் இப்படி விதை மற்றும் ஆண் குறி நீக்கப்பட்டு பணியமர்த்தப்பட்டார்கள். இரண் டாவது கார ணம், ஹோமோசெக்ஸ். இது சமுதாயம் ஏற்றுக் கொள்ளாத விஷயம் மட் டுமில்லை… சட்ட விரோத மும்கூட. மாட்டிக்கொண் டால் தண்டனைகிடைக்கு ம். இதற்கு பயந்து, விதை மற்றும் ஆண் குறியை வெட்டிக்கொள்வார்கள். மூன்றாவது காரணம்… குரல் வளம். பிற ந்ததிலிருந்து இருக்கும் மென்மையான குரல், பருவ வயதை எட் டும்போதுதான் மாற்றம் அடை யும். அதாவது ஆணாக இருந்தா ல் கரடு முரடாக மாறும்.
இப்படி மாறாமல் மென்மையா ன குரலே வேண்டும் என்பதற் காக விதை மற்றும் ஆண் குறி யை வெட்டிக் கொள்வார்கள். அதாவது, ஹார்மோன் சுரந்தா ல்தான் பருவத்தை எட்ட முடியும். குறியை அகற்றிவிட்டால், ஹா ர்மோன் சுரப்பது குறைந்து… குரல் மாறாமல் அப்படியே இருக்கு ம்.
இப்படி வெட்டிக்கொள் வதன் மூலம் இவர்கள் பெண்ணாக முடி யாது என்பது முக்கியமான விஷயம்! சரி.. சராசரி ஆணாகவோ… பெண் ணாகவோ பிறந்தவர் கள்… “டிரான்ஸ் வெஸ் ட்” மற்றும் “டிரான்ஸ் செக்ஸுவல்கள்” ஆகி ய இரண்டு ரகங்களாக மாறக் காரணம்?
டிரான்வெஸ்ட் மற்றும் டிரான்ஸ் செக்ஸுவல்கள் என்று இரண்டு ரகங்களாக, மனிதர்க ளில் சிலர் மாறுவதற்கு உளவியல் நிபுணர்கள் பல காரணங்க ளைச் சொல்கிறார்கள். குழந்தையி லிருந்து வளர்க்கப்பட்ட முறையில் தப்பு இரு ப்பதுதான் முக்கிய காரண மாகப் பல ருக்கும்படுகிறது. சின்ன வயசிலிருந்து பையன் அம்மாவிடம் நெருக்கமாகப் பழகி வளர்வான். அவனுக்கு ரோல்மாடலே அம்மா தான்! கோலம் போடுவது, சமைப்ப து என அம்மாவை மாதிரியே செய்ய ஆரம்பித் து, கடைசியில் தன்னைப் பெண்ணாக உணர ஆரம்பித்து விடுகி றான் என்பது ஒரு தியரி.
இன்னும் சில வீடுகளில் பெண் குழந்தை வேண்டும் என்று எதிர் பார்ப்பார்கள். ஆனால், வரிசை யாக ஆண்குழந்தைகள் பிறக்கும் . இதில் ஏதாவது ஒரு குழந்தை யைப் பெண் மாதிரி உடை போட் டு, சடை பின்னி, பொட்டு வைத்து வளர்ப்பார்கள். இப்படி வளர்க்கப் படும் குழந்தை, தன்னைப் பெண் என்றே கற்பனை செய்து கொள்கி றது… அதுதான் குழப்பத்துக்குக் காரணம் என்பது இன்னொரு தியரி.
இதைத் தவிர, சின்ன வயதில் செக்ஸ் சித்ரவதையை அனுபவிப் பது, செக்ஸ் பற்றிய விபரீதமான கற்பனைகளோடு வளர்வது, ஹோமோசெக்ஸ் ஆசையை அடக்கி வைத்துத் தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்வது… இப்படி பல கா ரணங்களும் சொல்லப்படு கிறது. டிரா ன்ஸ்செக்ஸுவல்களில் பலர் சீரியஸா க ஆபரேஷன் செய்து, தங்களை மாற் றிக்கொள்ள விரும்புகிறார்கள். வட இந்தியாவின் பிரபல தொழிலதிபர் குடு ம்பத்தைச் சேர்ந்த அபர்ணா, நாற்பது வயதில் ஆபரேஷன் செய்து அஜய் என்ற பெயரோடு ஆணாக மாறிய பிறகு, இந்த ஆபரேஷன் பற்றி அதிகம் செய்திகள் வருகின்றன.
ஒருகாலத்தில் உலகம் முழுக்க இந்த மாதிரி பாலினம் மாற்றும் ஆபரேஷன்கள் சட்ட விரோதமா கக் கருதப்பட்டது. ஆனால், ரகசி யமாக டாக்டர்கள் இதைச் செய்த படிதான் இருந்தார்கள். இதை பாப் புலராக்கியது, ஜார்ஜ் ஜார்ஜென்ச ன் சீனியர் என்ற அமெரிக்க ராணு வ வீரர். சின்ன வயதிலிருந்தே இவருக்குத் “தான் ஒரு பெண்” என்ற உணர்வு இருந்தது. இருந்தா லும் இவர் தேர்ந்தெடுத்தது, ராணுவ வேலையை! ஒன்ற ரை வருஷம் ராணுவத்தில் வேலை பார்த்த ஜார்ஜ், உடம்பு சரியில்லாததால் ராஜினாமா செய்தார். அப்போது டென்மார்க்கில் மட் டும் அரசு அனுமதியோடு இந்த ரக ஆப ரேஷன்கள் செய்யப்பட்ட ன. தனது இருபத்தாறாவது வயதில் டென்மா ர்க் போன ஜார்ஜ், ஆபரேஷன் செய் து கொண்டு கிறிஸ்டி ஜார்சென் சன் என்ற பெயரோடு பெண் தோற் றத்தில் திரும்பி வந்தார்.
அது 1952-ம் வருஷம். இவரது ஆபரேஷன் பற்றி “நியூயார்க் டெய்லி நியூஸ்” பத்திரிகை முதல் பக்க த்தில் செய்தி வெளியிட்டது. “முன்னா ள் ராணுவ வீரர், அழகான பெண்ணாக மாறினார்” என்பதுதான் தலைப்பு. அந்த செய்தி உலகம் முழுக்கப் பற்றிக்கொ ண்டது. கிறிஸ்டி அழகாக வேறு இருந் தார்… அதனால் ஒரு பத்திரிகை விடாம ல் அவரது போட்டோ வந்தது.
இந்த பாப்புலாரிட்டியை அவர் புத்திசா லித் தனமாகப் பயன்படுத்திக் கொண் டார். கல்லூரிகள், சமூக சேவை அமை ப்புகளின் கூட்டங்கள் என பல இடங்க ளில் போய் அரவாணிகளுக்கு ஆதரவா கப் பேசினார் (ஒரே ஒரு தடவை டி.வி. “டாக் ஷோ” ஒன்றில் மட்டும் கிறிஸ்டி அவமானப்பட நேர்ந்தது. நிகழ்ச்சியை நடத்தியவர், தடாலடியாக ஒரு கேள்வி கேட்டார். ஆபரேஷனுக்கு முன் ஜார்ஜாக இருந் தபோது அவர் ஒரு பெண் ணைத் திரு மணம் செய்து கொண்டிருந்தார். “கிறி ஸ்டி என்ற பெண்ணாக மாறியபிறகு உங்கள் மனைவியுடன் எப்படி ரொமா ன்ஸ் செய்கிறீர்கள்?” என கேள்வி வந் தபோது, அவர் திகைத்துப் போனார். ஒன்றும் சொல்ல தெரியாமல் அவமான த்தோடு வெளிநடப்பு செய்தார்).
மேடைகளில் பாடுவது, இரவு விடுதிக ளில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நட த்துவது என சம்பாதித்து சொகுசாக வாழ்ந்த கிறிஸ்டியின் கதை, ஹாலிவு ட் படமாகவும் வந்து நன்றாக ஓடியது.
ஆனால், எல்லோருக்கும் கிறிஸ்டி மாதிரி அமைந்து விடுவதில் லை. அமெரிக்கரான ரீனி ரிச்சர்ட்சன் ஒரு கண் டாக்டர். ரிச்சர்டு ரஸ்கின்ட் என்ற பெயரோடு ஆணாகப் பிறந்தவர். கல்யாணமாகி ஒரு குழந்தையும் பிறந்த பிறகு பாலின மாற்று ஆபரேஷன் செய் துகொண்டு பெண்ணாக மாறினார். டென்னிஸ் விளையாட்டில் அவரு க்கு உயிர். பெண்ணாக மாறிய பிற கு அமெரிக்க ஓபன் பெண்கள் பிரி வில் அவர் விளையாடப்போனபோ து தடுத்து விட்டார்கள். கோர்ட்டில் வழக்குப் போட்டுத் தன் உரிமை யை நிலைநாட்டி, அடுத்த ஆண்டு விளையாட வந்தார் அவர். ஒரு தடவை வெற்றியும் பெற்றார். ஆனால், தன் வாழ்க்கையின் கடை சி நாட்களில் ஒரு டி.வி. பேட்டியில், “ஆபரேஷன் செய்துகொண்டு பெண் ணாக மாறியதற்கு இப்போது வருத்தப் படுகிறேன்” என மனம் நொந்து சொ ன்னார்.
சமூகம் சில விஷயங்களை அவ்வளவு எளிதாக ஜீரணித்துக் கொள்ளாது. ஆப ரேஷன் செய்து தனது பாலின அடையா ளத்தை மாற்றிக்கொண்டு, சமுதாயத்தி ன் கேலிப் பார்வைகளை சகித்துக்கொ ண்டு வாழ, உறுதியான மனப்பக்குவம் வேண்டும். அது இல்லாத பலர், தற்கொ லை செய்துகொண்டு இறந்து போகிறா ர்கள். சிலர் அனுபவமற்ற டாக்டர்களி டம் ஆபரேஷன் செய்து கொள்கிறார்கள். இதில் தப்பு நடந்து இற ந்துபோகிறவர்கள் நிறைய பேர்.
இந்த ஆபரேஷனுக்கு என்று சில நடைமுறைகள் இருக்கின்றன.முதலில் உளவியல் பரிசோ தனை செய்வார்கள். ஆபரே ஷனுக்குப் பிறகு அவர்களா ல் சமுதாயத்தில் வாழமுடி யுமா என்பதை அறிய இந்த சோதனை. இதன்பிறகு அவ ர்கள் இதற்கு சட்டப்படி கோ ர்ட் அனுமதி வாங்க வேண் டும். இதைப் பெற்ற பிறகே ஆபரேஷன் செய்யலாம். இ து ஒருநாளில் செய்து முடிக் கிற ஆபரேஷன் இல்லை.
ஆணாக இருந்து பெண்ணாக மாற விரும்பும் ஒருவருக்கு, பெண்களின் ஹார்மோ ன்களை செலுத்து வார்கள். இதுதவிர முகத்தில் மீசை, தாடி ஆகியவற்றை அகற்ற லேசர் சிகிச் சை தரப்படும். இந்த சிகிச்சை தரப்படும் இரண்டு ஆண்டுகளும் அந்த ஆண், பெண்களின் உடையை அணி ய வேண்டும். அரைகுறையாக முகத்தில் இருக்கும் தாடி, மீசை யோடு பெண்களின் உடை அணிந்து பொது இடங்களுக்குப் போகிறபோது, மற்றவர்களது விசித் திரமான பார்வைகளைத் தாங்கி க்கொள்ள வேண்டும்.
இதன்பிறகே பிரதான ஆபரேஷ ன்! பிளாஸ்டிக் சர்ஜன், உளவிய ல் நிபுணர் அல்லது செக்ஸாலஜி நிபுணர், ஹார்மோன் ஸ்பெஷ லிஸ்ட், சிறுநீரகவியல் நிபுணர் இப்படி ஒரு குழுவே சேர்ந்து ஆப ரேஷன் செய்யும். ஆபரேஷனுக் குப் பிறகும் நிரந்தரமாக ஹார் மோன் மருந்துகளை செலுத்திக்கொள்ள வேண்டும்.
ஒருமுறை இப்படி ஆபரேஷன் செய்துகொண்ட பிறகு திரும்பவும்பாலினம் மாற முடியாது. அது மட்டுமில்லை… இப்படி ஆபரேஷன் மூலம் முழுமை பெற்ற பெண்ணாகவோ, ஆ ணாகவோ ஒருவர் மாறிவிட முடியாது. ஆண், பெண்ணா க மாறும்போது வெளிப்புற தோற்றங்களில்தான் மாற்ற ம் நிகழும். அவர்களுக்குக் கருப்பை கிடையாது என்ப தால், குழந்தை பெற்றுக் கொள்வது சாத்தியமில்லை. இதே நிலைதான் பெண்ணாக இரு ந்து ஆணாக மாறுபவர்களுக்கும். சிகிச்சை முறையும் அதே போ லத்தான். இருந்தாலும் விதை, விந்து தயாரிப்பு இல்லாததால் இவர்க ளால் தந்தையாக முடி யாது.
ஒட்டுமொத்தமாக நாம் ஒரு விஷயத்தை உண ரவேண்டும்… அரவா ணிகளாக இருப்பவர்க ளைசமூகம் கேலிப்பார் வையோடுதான் பார்த் துக் கொண்டிருக்கிற து. அவர்களும் மனிதர்கள்தான். இயற் கைதான் அவர்களுக்குத் தண்டனை கொடுத்திருக்கிறது. சக மனிதர்களான நாம் செயற் கையாகவேறு தண்டனைகள் கொடுத்துத் துன்புறுத்தாமல் இரு க்க வேண்டும்.
- பா லி ய ல்   ம ரு த் து வ ர்   நா ரா ய ண   ரெ ட் டி