நமது உடலின் செயல்பாடுகள் அனைத்தும், முறையாக செயல்படுவதற்கு தண்ணீர் இன்றியமையாத ஒன்றாகும். உடலின் பெரும்பாலான உறுப்புகள் நீரால் உருவானது. அதில் 70 சதவீத தண்ணீரால் தசைகளும், 90 சதவீத தண்ணீரால் மூளையும் மற்றும், 83 சதவீத தண்ணீரால் ரத்தமும் உருவாகியுள்ளது. எனவே தான் உடலின் அனைத்து பாகங்களுக்கும் தண்ணீர் மிகவும் இன்றியமையாததாக உள்ளது. இத்தகைய தண்ணீரை, வெறும் வயிற்றில் குடிப்பதன் வாயிலாக, பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன.
குடல் சுத்தமாகும்: அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால், கிடைக்கும் நன்மைகளில் முதன்மையானது, குடல் சுத்தம். தண்ணீர் குடித்தவுடன், சிறிது நேரத்திலேயே மலம் கழிக்கக்கூடும். இப்படி தினமும் தவறாமல் மலம் கழித்தாலே, உடலில் உள்ள கழிவுகள் அனைத்தும் முற்றிலும் வெளியேறிவிடும்.
பசியை தூண்டும்: தண்ணீரானது உடலின் மூலைமுடுக்குகளில், தங்கியுள்ள நச்சுக்களை சிறுநீர் மூலமாக வெளியேற்றிவிடும். தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுக்கள் வெளியேறி, விரைவில் பசி எடுக்க ஆரம்பித்துவிடும்.
ரத்த செல்கள் உற்பத்தி: வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால், ரத்தத்திலுள்ள சிவப்பணுக்களின் வளர்ச்சி அதிகரிக்கும். இதனால்
ரத்தத்தில் அதிகப்படியான ஆக்ஸிஜன் கிடைப்பதால், உடல் எனர்ஜியுடன் இருக்கும்.
தலைவலியை தடுக்கும்: பெரும்பாலானோருக்கு உடலில் நீர்ச்சத்து, குறைவாக இருப்பதால் அடிக்கடி தலைவலி ஏற்படும். இவர்கள் தினமும் அதிகாலையில், வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், உடலின் நீர்ச்சத்தானது அதிகரித்து, தலைவலி குறையும்.
அல்சரை தடுக்கும்: காலையில் சாப்பிடாமல் அலுவலகத்திற்கு செல்பவர்கள், தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், அல்சர் ஏற்படாமல் தடுக்கலாம்.
எடை குறைப்பு: எடையை குறைக்க நினைப்பவர்கள், அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், உடலில் தங்கியுள்ள நச்சுக்களுடன், உடலின் மெட்டபாலிசம் அதிகரிப்பதால், தேவையற்ற கொழுப்புக்களும் கரைந்து வெளியேறி, உடல் எடை குறைய உதவியாக இருக்கும்.
பொலிவான சருமம்: குடலானது சுத்தமாக இல்லாவிட்டால், முகத்தில் பருக்கள் வர ஆரம்பிக்கும். இப்படி பருக்கள் வந்தால், சருமம் அழகை இழந்துவிடும். எனவே தினமும் தண்ணீரைக் குடித்து வந்தால், குடலியக்கம் சீராக நடைபெற்று, முகம் பருக்களின்றி பொலிவுடன் காணப்படும்.
பசியை தூண்டும்: தண்ணீரானது உடலின் மூலைமுடுக்குகளில், தங்கியுள்ள நச்சுக்களை சிறுநீர் மூலமாக வெளியேற்றிவிடும். தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுக்கள் வெளியேறி, விரைவில் பசி எடுக்க ஆரம்பித்துவிடும்.
ரத்த செல்கள் உற்பத்தி: வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால், ரத்தத்திலுள்ள சிவப்பணுக்களின் வளர்ச்சி அதிகரிக்கும். இதனால்
ரத்தத்தில் அதிகப்படியான ஆக்ஸிஜன் கிடைப்பதால், உடல் எனர்ஜியுடன் இருக்கும்.
தலைவலியை தடுக்கும்: பெரும்பாலானோருக்கு உடலில் நீர்ச்சத்து, குறைவாக இருப்பதால் அடிக்கடி தலைவலி ஏற்படும். இவர்கள் தினமும் அதிகாலையில், வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், உடலின் நீர்ச்சத்தானது அதிகரித்து, தலைவலி குறையும்.
அல்சரை தடுக்கும்: காலையில் சாப்பிடாமல் அலுவலகத்திற்கு செல்பவர்கள், தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், அல்சர் ஏற்படாமல் தடுக்கலாம்.
எடை குறைப்பு: எடையை குறைக்க நினைப்பவர்கள், அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், உடலில் தங்கியுள்ள நச்சுக்களுடன், உடலின் மெட்டபாலிசம் அதிகரிப்பதால், தேவையற்ற கொழுப்புக்களும் கரைந்து வெளியேறி, உடல் எடை குறைய உதவியாக இருக்கும்.
பொலிவான சருமம்: குடலானது சுத்தமாக இல்லாவிட்டால், முகத்தில் பருக்கள் வர ஆரம்பிக்கும். இப்படி பருக்கள் வந்தால், சருமம் அழகை இழந்துவிடும். எனவே தினமும் தண்ணீரைக் குடித்து வந்தால், குடலியக்கம் சீராக நடைபெற்று, முகம் பருக்களின்றி பொலிவுடன் காணப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக